Wednesday, February 5, 2014

பிறப்பு, இறப்புச்சான்றிதழ் பெறுவதுஎப்படி?

இந்தியச் சட்டப்படிகுடும்பஅட்டை, ஓட்டுநர்உரிமம், வாக்காளர் அடையாள
அட்டைமுதல் பாஸ்போர்ட் வரை அனைத்துஆவணங்களையும் பெற வயதுச்சான்றாகப்
பயன்படுவதுபிறப்புச்சான்றிதழ். ஏன், திருமணத்திற்கேகூட வயதுச்
சான்றிதழ்கட்டாயமாகிறது. அதேபோலவாரிசுகளின் உரிமை, சொத்துரிமை,
அரசுசலுகைகள் போன்றவற்றைப்பெற இறப்புச் சான்றிதழ்அவசியமாகிறது. இத்தனை
முக்கியத்துவம் வாய்ந்த பிறப்புமற்றும் இறப்புச்
சான்றிதழ்களைப்பெறுவதுஎப்படி? விவரங்கள் இங்கே...
பிறப்பைப் பதிவுசெய்வதுகட்டாயமா?
பல்வேறு விஷயங்களுக்காகப் பிறந்த தேதியைஆவணப்படுத்துவது கட்டாயமாகிறது.
இந்தியாவில், 1969-ஆம் ஆண்டு பிறப்புமற்றும்
இறப்புபதிவுச்சட்டப்படி,பிறந்த ஒவ்வொரு குழந்தையும்21 தினங்களுக்குள்
பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். அதற்காக, கிராம/நகரப்
பதிவுத்துறை,மாவட்டப் பதிவுத்துறை,மாநில பதிவுத்துறை, மத்திய
பதிவுத்துறைஎனச் சிறப்பாகக் கட்டமைத்து இணைக்கப்பட்ட
பொதுப்பதிவுத்துறையைஇந்திய அரசுஏற்படுத்தியுள்ளது.
எங்கே பதிவுசெய்வது?
ஒருவர்பிறப்புச்சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியைப்பதிவுத் துறையில்
பதிவுசெய்திருக்க வேன்டும். பதிவுஅதிகாரியிடமிருந
்துபெறப்பட்ட பதிவுவிண்ணப்பப்படிவம்வாயிலாக, குழந்தை பிறந்த 21
தினங்களுக்குள் சம்பந்தப்பட்டஏரியாவிலுள்ள பதிவுஅதிகாரியிடம்
பிறப்பைபதிவுசெய்யவேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளில
ிருந்து பெறப்பட்டஆவணங்களின் அடிப்படையில்,உரிய
பரிசீலனைக்குப்பின்னர்பிறப்புச் சான்றிதழ்வழங்கப்படும்.
ஒருவேளை குறிப்பிட்ட21 நாட்களுக்குள் பதிவுத்துறையில்
பிறப்புபதிவுசெய்யப்படவில்லை என்றாலோஅல்லதுவீடுகளில்
பிறப்புநடந்திருந்தாலோ, அந்தப் பகுதி காவல்துறைமூலம்
பிறப்புஉறுதிசெய்யப்பட்டபின்னர் பதிவுத்துறைஅதிகாரிகளால்பிறப்புச்
சான்றிதழ்வழங்கப்படுகிறது.
எத்தனைநாட்களுக்குள் பதிவுசெய்யப்படவேண்டும்?
பிறப்பை21 நாட்களுக்குள்ளும், இறப்பைஒருவாரத்திற்குள்ளும் பதிவுசெய்யவேண்டும்.
பிறப்புஅல்லதுஇறப்பிற்குப்பின்னர் ஐந்து அல்லதுஅதற்கும் மேற்பட்ட
ஆண்டுகள் ஆகிவிட்டால்பிறப்புச் சான்றிதழ்அல்லதுஇறப்புச்
சான்றிதழைசம்பந்தப்பட்டபகுதியின் சார்பதிவாளர்அலுவலகத்தில்தான் பெற
முடியும். நகரம் அல்லதுமாநகரம் என்றால், நகராட்சி அல்லதுமாநகராட்சி
அலுவலகத்தில்பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
கட்டணவிவரம்:
மூன்று வாரங்களுக்குள் இலவசமாகவும், அதற்குமேல் ஒருமாதம் வரை 5 ரூபாயும்,
ஓராண்டிற்குமேல் ரூபாய்10/- மற்றும் மாவட்டநீதிபதிஅவர்களின் ஆணையும்
தேவை.
மருத்துவமனையில் பிறப்பைபதிவுசெய்தல்:
மருத்துவமனையில்நடக்கும் பிறப்புகள் அனைத்தும் மாநகராட்சிக்கு தெரிவிக்கப்படும்.
மருத்துவமனைசான்று கிடைத்தவுடன் ஒரே நாளில்
மாநகராட்சியால்பிறப்புச்சான்று வழங்கப்படும்.
பிறப்புச்சான்றைஅந்தந்த மாநகராட்சியின் இணையதளத்தில் இலவசமாகப்பெறமுடியும்.
குழந்தையின் பெயரை ஓராண்டு வரைமாநகராட்சி அலுவலகத்தில்பதிவுசெய்யலாம்.
எத்தனைநகல்கள் பெற முடியும்?
இச்சான்றிதழ்எத்தனைநகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காகஉரிய
கட்டணங்கள்கட்ட வேண்டியிருக்கும்.இதற்காக, ஒருதனிவெள்ளைத்தாளில்
ஒருவேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில்
இரண்டுரூபாய்க்கானநீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கானசான்றுகளாக
மனுதாரரின் குடும்ப அட்டைஅல்லதுஏதாவதுமுகவரிச் சான்று, குழந்தையின்
பெயருடன் கூடிய பள்ளிச் சான்றுபோன்றவற்றை இணைத்து
விண்ணப்பித்தால்வட்டாட்சியர் அவ்விண்ணப்பத்தின்மீதுஉரிய விசாரணைசெய்து,
வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும்பட்சத்தில், குறிப்பிட்டசார்பதிவாளர்
அலுவலகத்தில்உள்ள பிறப்புப் பதிவேட்டைவட்டாட்சியர்
அலுவலகத்திற்கேவரவழைத்துப் பெயர்பதிவுசெய்துமீண்டும் அப்பதிவேட்டைஅந்தச்
சார்பதிவாளர் அலுவலகத்திற்கேஅனுப்பிவைப்பார்.
பிறப்பு/ இறப்புச்சான்றிதழ்களில் மாற்றங்கள்
பெற்றோர்சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவுசெய்யும்அலுவலர்ஏதேனும்
தவறு செய்திருந்தால்மட்டும், பதிவுசெய்கையில்பெற்றோர் அளித்த
விண்ணப்பத்தில்உள்ள தகவல்களைப்பரிசோதித்துவிட்
டு அதைமாற்றித்தருவர்.
அப்படியானசூழலில்சரியான தகவல்களை ஆதாரத்துடன்அளித்து,
திருத்தங்கள்செய்யவேண்டுகோள் கடிதம் கொடுக்கவேண்டும்.
குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில்மாற்ற முடியுமா?
பிறந்த குழந்தையின் தாய், தந்தையர் அல்லதுமுகவரியில்ஏதேனும் தவறு
இருந்தால், அதைச்சரியான சான்றுகள் அளித்துமாற்றிக் கொள்ளலாம்;
அதேவேளையில் குழந்தையின் பெயரில்ஏதேனும் மாற்றம் தேவையென்றால்
அப்படிமாற்ற முடியாது.எனவே, குழந்தையின் பெயரை உறுதிசெய்த பின்னரே அதை
பிறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யவேண்டும். ஒருமுறை பதிவுசெய்துவிட்டால்,
அதை மாற்றுவதுஅவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பதிவானபின்குழந்தையின்
பெயர் மாற்றப்படமாட்டாது.பதிவான பெயரை அரசுகெஜட் மூலமே மாற்ற முடியும்.
இந்தியபெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால்:
இந்தியாவில் உள்ள ஒருகணவனும் மனைவியும் பணி நிமித்தமாக
அல்லதுகுழந்தைப்பேறுமருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள
ஒருமருத்துவமனையில் மருத்துவம் பார்த்துஅங்கேயேகுழந்தை பெற்றுக்கொண்டால்,
அக்குழந்தையின் பிறப்பைஅங்குள்ள தூதரகஅலுவலகம் வாயிலாகப்
பதிவுசெய்யவேண்டும்.
ஒருவர்கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிர
ுக்கும்போது அவருக்குஉயர் மருத்துவக்காரணங்களுக்காக அவருடையஉறவினர்கள்
வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.
அப்படிவெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ
நடவடிக்கைகளின்போது அந்தநபர் இறந்து விட்டால்,அங்குள்ள தூதரகம்வாயிலாகப்
பதிவுசெய்துசான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பயணத்தின்போதுகுழந்தைபிறந்தால்:
பிறப்புமற்றும் இறப்புப் பதிவுஎன்பதுஒவ்வொருவரின் சொந்த ஊரில்
அல்லதுநிலையான இருப்பிடத்தில்தான்பதிவுசெய்யப்பட வேண்டும் என்று
பலர்நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதவறு. ஒருகுழந்தை எங்குபிறக்கிறதோ
அங்குதான் அதன் பிறப்புபதிவுசெய்யப்படவேண்டும். அதே போல், ஒருவர் இறந்து
விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோஅங்குதான் அவரதுஇறப்புபதிவுசெய்யப்பட
வேண்டும்.
விமானத்தில் அல்லதுகப்பலில் பயணிக்கும்போதுகுழந்தை பிறந்தால்
அல்லதுஒருவர்இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு
முடிகிறதோஅங்குதான் அந்தப் பிறப்புஅல்லதுஇறப்புபதிவு
செய்யப்படவேண்டும்.எரிபொருள் நிரப்ப அல்லதுஅச்சுறுத்தல் காரணமாக
அந்தவிமானம் அல்லதுகப்பல் ஏதாவதுஒருநிலையில்
நிறுத்தப்பட்டால்அதைப்பற்றிஎந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை
அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார
்களோ அங்குதான்பதிவுசெய்ய வேண்டும்

No comments:

Post a Comment