Wednesday, February 5, 2014

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

குழந்தைகள் பாதுகாப்புமற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம்
முழுவதும்40ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சிவழங்கப்பட
உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவன இயக்குநர்
எஸ்.கண்ணப்பன் கூறினார். மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிஆசிரியர்களுக்குஇந்தப் பயிற்சிவழங்கப்பட உள்ளது. கட்டாயக்
கல்விஉரிமைச் சட்டத்தின்ஒருபகுதியாக இந்தப்
பயிற்சிதரப்படுகிறது.குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள்,
அவர்களைஎப்படிக் கையாள்வதுஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களில்
ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படஉள்ளன.யுனிசெஃப் மற்றும் துளிர்
உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்துஇந்தப் பயிற்சியின் போதுஆசிரியர்களுக்கு
வழங்குவதற்கானகையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் பாலியல்
கொடுமைக்குள்ளானது குறித்து தெரியவந்தால் அவற்றைஎவ்வாறுஅணுக வேண்டும்,
புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளின்மன
நிலையைப்புரிந்துகொள்ளுதல், அவர்களுக்குள்ளஉரிமைகளைத் தெரிந்துகொள்ளுதல்,
எதுபாலியல் கொடுமைஎன்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள்இதில்
இடம்பெற்றுள்ளன.பிப்ரவரி 6,7-ல் பயிற்சி: மாநில அளவிலான
கருத்தாளர்களுக்கு வியாழன்(பிப்.6), வெள்ளிக்கிழமைகளில் (பிப்.7)
சென்னையில் பயிற்சிவழங்கப்படுகிறது.அதன்பிறகு, மாவட்ட மற்றும்
வட்டாரஅளவில்ஆசிரியர்களுக்குப் பயிற்சிவழங்கப்படும். இந்த
மாதத்துக்குள்40ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப்
பயிற்சிவழங்கப்படும்என கண்ணப்பன் தெரிவித்தார்

No comments:

Post a Comment