Saturday, February 8, 2014

‘புதைந்திருக்கும்’ மணல்ரகசியம்:

'புதைந்திருக்கும்' மணல்ரகசியம்: வல்லுநர்கள் புதியதகவல்
உலகின் பாரம்பரியச்சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப்பெரியகோயில் முழுக்க முழுக்க மணல் மீட்டுள்ளதுஎன்கின்றன சமீபத்தியஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடிதொலைவில் ஆழ்துளைக் கிணறுதோண்டப்பட்டது.
மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில்சுமார் மூன்று லாரிஅளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்புதெரிவித்ததால் அப்பணிநிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன்தென்னன்மெய்ம்மன் 'தி இந்து'விடம் கூறியதாவது:
கீழே இருமடங்கு சுமை
பெரியகோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும்சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில்கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல்படுகையைக் கொண்டுஉருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இருமடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
அதன்படிஇயற்கையாகஅங்கிருந்த சுக்கான் பாறையைதொட்டியாக வெட்டிஅதில் பரு மணலைநிறைத்து அதன் மீது கோயிலைக்கட்டியிருக்கிறா
ர்கள். கருங்கல்தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போதுமணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்தபாதிப்பும்நேராது.
தலையாட்டிபொம்மைபோல..
தஞ்சைபெரியகோயிலின் ஒருகன அடிகல்லின் எடை70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒருலட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாகசுமார் ஒருகோடி கன அடிபருமணலைகல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.இதன்மூலம் பூமித்தகடுகளின் அசைவின்போதுமணல் அஸ்திவாரம் தன்னைத்தானேசமப்படுத்திக்கொ
ள்ளும். இதனை zerosettlementof foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டிபொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிரவிழாது. தலையாட்டிபொம்மைகளின் பூர்வீகமும்தஞ்சாவூர் என்பதைஇங்கு கவனிக்க வேண்டும்.
இயல்பிலேயேகருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமேபொருத்தமானது. அதனால்தான்பெரும்பாலானகடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறுதோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயேஅங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடிஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான்களிமண் வெளியேறியுள்ளது.
இந்த மணல்தஞ்சாவூர் முகத்துவாரப்பகுதிக்கானமணல் அல்ல. தஞ்சாவூர்பகுதியில் இருப்பதுசமதளத்தில்ஓடும் காவிரிஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்குபெரியபருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில்படியும் மணல். மேற்குத்தொடர்ச்சிமலைகளின் காட்டாற்றுப்படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு பெருந்தச்சன்தென்னன் மெய்ம்மன் கூறினார்.
சிலை, நாணயங்கள் இருக்கலாம்
ஒடிசாமாநிலத்தில் வரலாற்றுக் கோட்டைகளை ஆய்வுசெய்தவரான ஒரிசா பாலு கூறும்போது,நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும்பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறுஅழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தா
ன் பிரமாண்டமானகோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படிபிரமாண்டமாக அமைத்தால்தான்அதன்அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்துபொருட்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, பெரியகோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம்தென் கிழக்குஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக்கட்டுமானக் கலையின் வரலாற்றையும்நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சிநடத்தித்தான்இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற அவசியம்இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Groundpenetratingradar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவிபடங்களைஎடுத்து ஆய்வு செய்யலாம்" என்றார்.
Thanksto
'தி இந்து'

No comments:

Post a Comment