Wednesday, February 26, 2014

காணவில்லை ஆவணம் திரும்ப பெற வழ

எவ்வளவுதான்கவனமாக இருந்தாலும் சிலநேரங்களில் ரேஷன் கார்டு,
டிரைவிங்லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசிஎன ஏதாவது ஒரு
முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டுபலரும் தவிப்பதைநாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்துபோனால் அல்லதுமழையில் நனைந்து கிழிந்து அழிந்துபோனால்
அவற்றைதிரும்பப் பெறுவதுஎப்படிஎன்பதைஇங்கே தெரிந்துகொள்ளலா
ம்.
* இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச்சான்றின் நகல்களில் நோட்டரி
பப்ளிக்சான்றொப்பம் இடப்பட்டவைமற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது
ஒரு ரசீது நகல்.
எவ்வளவுகட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக்கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இதுதவிர, கவரேஜ்
தொகையில் 1,000 ரூபாய்க்கு 20காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம்
செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த15 நாட்களுக்குள்நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசிகோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரியஇரண்டு
ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை80ரூபாய் பத்திரத்தில்
டைப்செய்துகொள்ள வேண்டும். இன்னொருஆவணத்தில் பாலிசிதொலைந்துபோன விவரங்கள்
கேள்வி பதில்வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்திசெய்து
நோட்டரிபப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்துதர வேண்டும்.
* மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்விஅதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல்நகல், பள்ளிமாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்தியரசீது.
எவ்வளவுகட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில்புகார் அளித்து'கண்டுபிடிக்க முடியவில்லை' என
சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/
நிறுவனத்தின்மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்திசெய்து தாசில்தாரிடம்
கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடுஒரு கடிதம் மற்றும்
இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டுஅதன் அடிப்படையில் அவர்பள்ளித்
தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக
தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்குஅனுப்ப வேண்டும். பட்டம் மற்றும்
அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக
வேண்டும்.
* ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்;
நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவிஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லதுஏதாவது ஒருஅடையாள அட்டை
எவ்வளவுகட்டணம்?
புதியரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில்காணாமல் போன விவரத்தைக்
குறிப்பிட்டு கடிதம் தந்து,அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப்
பூர்த்திசெய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுகுடும்ப
அட்டை அனுப்பிவைக்கப்படும்.
* டிரைவிங்லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்துஅதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லதுஎண்.
எவ்வளவுகட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில்புகார் தெரிவித்து, அவர்களிடம்சான்றிதழ்
வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
* பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லதுவருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச்
சான்று நகல்கள்.
எவ்வளவுகட்டணம்?
அரசுக்குச் செலுத்தவேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான
விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
* பங்குச் சந்தைஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறைசான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லதுஃபோலியோ எண்.
எவ்வளவுகட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின்
சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த45 நாட்களிலிருந்து90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குகடிதம் எழுதவும். இதன்
அடிப்படையில்காவல் துறையில் புகார் அளித்துசான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்பநிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில
நிறுவனங்கள்செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடவலியுறுத்தும்.
* கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவுதுறைதுணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறைகடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்டவிளம்பரம், யாரிடமும்
இருந்து ஆட்சேபனை வரவில்லைஎன்பதற்கான நோட்டரி பப்ளிக்ஒருவரின் உறுதிமொழி,
சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவுகட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இதுதவிர, கூடுதலாக ஒவ்வொரு
பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சிலநாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில்உள்ள காவல் நிலையத்தில்புகார்
அளித்துஅவர்களிடமிருந்துசான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம்
குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும். இதற்குபிறகு
சார்புபதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
* டெபிட்கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைமேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்துஓரிரு நாட்கள் அல்லதுஅதிகபட்சம் 15நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன்அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை
மையத்திற்குதகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள்
நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு
கடிதம் மூலம் தெரியப்படுத்திபுதுடெபிட் கார்டு வழங்குமாறுகோர வேண்டும்.
* மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டாகோரும் விண்ணப்பம்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சிலநாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின்
பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல்
பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்
விண்ணப்பித்தால் நகல் பட்டாகிடைத்துவிடும்.
* பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறைசான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து40 நாட்கள்;
வெளிநாட்டில் தொலைத்திருந்தால்அதிககாலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார்
அளித்துகண்டுபிடிக்கப்ப
டவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20ரூபாய் முத்திரைத்தாளில்
தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி
பப்ளிக்ஒருவரின் கையெழுத்துபெற்றுமண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்
விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பிவைத்துவிடுவார்கள்.
* கிரெடிட் கார்டு!
யாரை அணுகுவது?
நிறுவனத்தின்வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோனகிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15வேலை நாட்கள்.
நடைமுறை: கிரெடிட் கார்டு தொலைந்ததும்உடனடியாக வாடிக்கையாளர் சேவை
மையத்துக்கு தகவல் அளித்துபரிவர்த்தனைகளைநிறுத்த வேண்டும். தொலைந்த
கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை
நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவார்க
ள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க

Thursday, February 13, 2014

அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்பதால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள்மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில்நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக்
காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை
இரு மடங்கு அதிகமாக இருப்பதால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள்
அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,
பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி
கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில்
இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அண்மையில்
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குதேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில்
இருந்து 55 சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேர்ச்சி
பெற 150-க்கு 82 மார்க் பெற்றால் போதும். இதன்மூலம் இடஒதுக்கீட்டுப்
பிரிவினரில் கூடுதலாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி
பெற்றிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 16 ஆயிரம்
காலியிடங்கள் ஆனால், தகுதித்தேர்வுமூலமாக 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களையும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களையும் நிரப்ப
அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, நிரப்பப்படவுள்ள ஆசிரியர்
பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்
எண்ணிக்கை 2 மடங்கு அதிகம். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி கிடையாது. பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரையில் 14 ஆயிரம் காலியிடங்கள்
என்றாலும், பாடவாரியான காலியிடங்கள் இன்னும் தெரியவில்லை. பாடவாரியான
காலியிடங் களும், ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
என்ற பட்டியல் தெரிந்த பின்னரே , வேலை உறுதியா? இல்லையா? என்பதை அறிய
முடியும். ஒருசில பாடங்களில் காலியிடங்கள் இருக்கக்கூடும், ஆனால்,
தேர்ச்சி பெற்றவர்கள் தேவையான அளவு இருக்க மாட்டார்கள். அதேபோல்,
ஒருசிலவற்றில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக
இருப்பார்கள். காலியிடங்கள் குறைவாக இருக்கலாம். இந்த நிலையில், கட்-
ஆஃப் மார்க் குறைவாக இருப்பவர்கள் தங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை
உறுதி இல்லை என கருதுவதால், அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம் பார்வையைத்
திருப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று
காலியிடங்கள் குறித்த விவரங்களையும் அறிந்த வண்ணம் உள்ளனர்.

Wednesday, February 12, 2014

பள்ளிகளில்பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு

தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு
வழங்கப்பட்டு வரும் நிலையில், புதியசட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை
விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறை சம்பவங்களை தடுக்க, குடும்ப
வன்முறை பாதுகாப்பு, வரதட்சணை தடுப்பு, பலாத்காரம் தடுப்பு, வாரிசு
உரிமை, விதவை மறுமணம், ஈவ் டீசிங், வன்கொடுமை, சொத்து உரிமை, ஜீவனாம்சம்
பெறும் உரிமை என, சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.பெண்களுக்கான
பாதுகாப்பு சட்டம் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கான
பாதுகாப்பு சட்டங்களில், கடுமையான தண்டனை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், 2012ம் ஆண்டு, டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு
கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய, மாநில அரசு,
பாலியல் தொடர்பான சட்டங்களில், சில திருத்தங்களை கொண்டு வந்தன. அதன்படி,
நான்கு விதமான பாலியல் தாக்குதல் வகைகள், அந்த பாலியல் தாக்குதல், யாரால்
எல்லாம் ஏற்படுகிறது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், புதிய
சட்டவிதிமுறைகள் மற்றும் தண்டனைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன.
கடுமையான பாலியல் தாக்குதல் பிரிவில், போலீசார், ராணுவ வீரர், அரசு
ஊழியர், சிறைச்சாலை ஊழியர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்,
கல்வி நிறுவன ஊழியர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆறு
மாதம் முதல், ஆயுள் தண்டனை வரை, சிறை தண்டனை கிடைக்க, வழிவகை
செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பான புகாரை, போலீஸ், சிறப்பு சிறார்
போலீஸ் யூனிட், பஞ்சாயத்து தலைவர், வி.ஏ.ஓ., குழந்தைகள் நலக்குழு,
குழந்தைகள் பாதுகாப்புக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். அதற்காக, "சைடு லைன் தொலைபேசி எண்:
1098' என்பதை தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், பாலியல்தொடர்பான
விழிப்புணர்வை பெற, பள்ளி மற்றும் கல்லூரிகளில், பாலியல் குற்றங்களில்
இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், 2012 மற்றும் குழந்தை
திருமணத்தை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு, தமிழகத்தில் பள்ளி,
கல்லூரிகளில் வழங்கப்பட்டுவருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி கூறியதாவது: பள்ளிகள் அளவில்,
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், கல்லூரி அளவில், பட்டபடிப்பு
மாணவ, மாணவியருக்கும், விழிப்புணர்வு கையேடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்
மூலம் வழங்கப்படும். அதில், பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, கடுமையான
பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, ஆபாச படம் எடுத்தல் தண்டனை, ஒரு முறைக்கு
மேல், அதே குற்றத்தை செய்தல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல்,
குற்றங்களை மறைத்தல் உள்ளிட்ட முறைகளில், ஆறு மாதம், ஐந்தாண்டு, ஏழாண்டு,
பத்தாண்டு, ஆயுள் தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கூறினார்.

பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தரகணக்கு எண

தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான
சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்
மூலம், ஒருவர், வேறுநிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர
கணக்கு எண்ணை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன்,
பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை, புதிய நிறுவனத்திற்கு, இணையதளம்
வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி, கடந்த 2013ம் ஆண்டு,
அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்த போதிலும், பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் டிஜிட்டல்
கையொப்பங்களை, இ.பி.எப்.ஓ.,விடம் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளன. இதனால்,
அந்நிறுவனங்களில் இருந்து, வேறு நிறுவனங்களுக்கு மாறுவோர், இ.பி.எப்.,
கணக்கை மாற்ற, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி உள்ளது.
இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில் தான், இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண்
திட்டம் அறிமுகமாக உள்ளது. இதனால், ஒருவர் எங்கு பணியாற்றினாலும்,
அவரிடம் பிடித்தம் செய்யப்படும், தொகை, இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு
எண்ணின் கீழ்,
இணையதளம் வாயிலாகவே வரவு வைக்கப்படும்

ஆசிரியர் தகுதி தேர்வுஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் ரோல் நம்பர் அறிய ஏற்பாடு.

டிஇடிதேர்வு எழுதியவர்கள்ஹால் டிக்கெட்டைதொலைத்துவிட்டால், அவர்கள்தங்கள்
ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடுசெய்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவதுஆசிரியர் தகுதித் தேர்வு2013ல் நடந்தது.
அதில்சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வுமுடிவுகள்
வெளியிடப்பட்டுஅதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குகடந்த மாதம் சான்று
சரிபார்ப்பு நடந்துமுடிந்தது.இதற்கிடையே, ஆசிரியர் தகுதித்
தேர்வுஎழுதும்பிசி, எம்பிசி, எஸ்டி, எஸ்சி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டின்
கீழ் வருவோர் டிஇடிதேர்வில் 55% மதிப்பெண் எடுத்தால்போதும் என்றுஅரசு
அறிவித்தது. அதற்கான உத்தரவில்150க்கு 82 மதிப்பெண்எடுத்தால் தேர்ச்சி
என்றும் அரசுஉத்தரவிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வில் மேற்கண்ட 55
சதவீதமதிப்பெண் எடுத்தவர்களின் பட்டியலைடிஆர்பி தயாரித்து வருகிறது.
55சதவீதம்மதிப்பெண் போதும் என்றுஅரசு உத்தரவிட்டதால், டிஇடிதேர்வு
எழுதியவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்துகொள்ள
டிஆர்பிக்கு படைஎடுத்து வருகின்றனர். அவர்களில்சிலர் ஹால்
டிக்கெட்டைதொலைத்துவிட்டதாக அதன் நகல் கேட்டு டிஆர்பிக்கு நேரடியாக
வருகின்றனர்.
தினமும் இதுபோல வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.இதை கருத்தில்
கொண்டுஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் தங்கள்மதிப்பெண்களைதெரிந்து கொள்ள
வசதியாக, டிஆர்டி இணைய தளத்தில் சிறப்புஏற்பாடுசெய்துள்ளது.
தேர்வுஎழுதியோர், ஹால் டிக்கெட்டைதொலைத்தவர்கள் தங்களின்விண்ணப்ப எண்ணை
இணைய தளத்தில் பதிவுசெய்தால், அவர்களின்ரோல் நம்பர்
அதில்தெரிந்துகொள்ளலாம். அதன் மூலம் பின்னர் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள
முடியும்.

"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசுஅறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75ஆயிரமாக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு
15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலைஆசிரியர்களின் பணியிடங்களேஉள்ளதால் மீதமுள்ள60ஆயிரம்
ஆசிரியர்களின் நிலைஎன்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியைமட்டுமே பெற்றுள்ளனர்.
இப்போதுபணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசுஉதவி
பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளில்பணி நியமனங்களில் முன்னுரிமை
கிடைக்கும். மேலும் அடுத்தஆண்டுக்கான பணி நியமனத்திலும்இவர்கள்
பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.இப்போதுதேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச்
சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரிமற்றும் இடைநிலைஆசிரியர் பணி
நியமனத்துக்குதனியாக அறிவிப்புவெளியிடப்படும் எனவும்அதிகாரிகள்
தெரிவித்தனர்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை
அறிவிக்கப்பட்டதை அடுத்துதேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75ஆயிரமாக
உயர்ந்துள்ளது.இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர
மீதமுள்ளவர்களின் நிலைஎன்ன என்றுதேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது
தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோதுஅவர்கள் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுஎன்பது1 முதல் 8ஆம் வகுப்பு
வரைஆசிரியராவதற்கான அடிப்படைத்தகுதி மட்டுமே. அந்த வகையில்இந்த
75ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்
தகுதியைப்பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்குஆசிரியர் தகுதிச் சான்றிதழ்
வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலைஆசிரியர் பணி
நியமனத்துக்கான அறிவிப்புதனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு
வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும்
பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிமற்றும்
இடைநிலைஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வுமதிப்பெண், பிளஸ் 2,
பட்டப் படிப்புமற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில்"வெயிட்டேஜ்'
மதிப்பெண் வழங்கப்பட்டுபட்டதாரிஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
இடைநிலைஆசிரியர்கள்:
ஆசிரியர் தகுதித் தேர்வுமதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்புஅடிப்படையில்
"வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலைஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர்.தகுதியான
விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில்
தேர்வுசெய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வுசெய்யப்படாதவர்களாகக்
கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்துநடைபெறும்ஆசிரியர் தகுதித்
தேர்வில் தங்களதுமதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை
எழுதலாம்.அதேநேரத்தில், ஒருதேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச்
செல்லும்என்பதால், அடுத்துவரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும்இவர்கள்
விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசுஉதவிப் பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில்பணி நியமனம் பெறுவதற்கானதகுதியையும் இவர்கள்பெறுவார்கள்.
அரசுப்பள்ளிகளில்ஆசிரியர் நியமனம் என்பதுஅப்போதுநடைமுறையில் உள்ள
அரசாணையின் அடிப்படையில்இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெறுவதுஎன்பதுபணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியைமட்டுமே
வழங்கும். பணி நியமனத்தைவழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வுதொடர்பான
வழக்குகள் நீதிமன்றத்தில்இன்னமும் நிலுவையில்உள்ளன.இந்த வழக்குகள்முடிந்த
பிறகு, இதுகுறித்துதெளிவான அறிவிப்புவெளியிடப்படும் எனவும்அவர்கள்
தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
எனவே, இதில்ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலைபோன்ற
பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்றஆசிரியர் தகுதித்
தேர்வில் 29ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி
வழங்கப்படும் என்றுதெரியவந்துள்ளது.

Sunday, February 9, 2014

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் விரைவில்
கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி
கல்லூரிகளில் உள்ள வெவ்வேறு பாடத்திட்டங் களைஆராய மூத்த பேராசிரியர்கள்
தலைமையில் 9 முதன்மைக் குழுக்கள்அமைக்கப்படுகின்றன.
மாணவர்களின் பிரச்சினை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக
பல்கலைக்கழங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு மாநில
உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்து அதற்கான பணியில் மும்முரமாக
ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர்
பேராசிரியர் கரு.நாகராஜன் "தி இந்து" நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும்
பாடப்பிரிவுகளின் தரத்தை ஒருங் கிணைக்கவும், மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்துக்கு
சென்று படிக்கவும், பாடம் நடத்தவும் இந்த ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
(இன்டக்கிரேடட் சிலபஸ்) மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒவ்வொரு முறையும் ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில் சான்றிதழ்
சரிபார்ப்பின் போது மாணவர்கள் சமமான பாடத்திட்டம் என்பதை குறிப்பிடும்
ஈக்குவேலன்ஸ் என்ற சான்றுக்காக கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களும்,
மாநில உயர்கல்வி கவுன்சில் அலுவல கத்துக்கும் டி.ஆர்.பி.,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையங் களுக்கும் அலைந்து கடைசியாக
நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்கள்
வேலைவாய்ப்பைஇழந்துள்ளனர்.
உதாரணத்துக்கு, தன்னாட்சிக் கல்லூரி ஒன்று எம்.ஏ. வரலாறு என்ற
பாடத்திட்டத்தில் சர்வதேச வரலாறை முக்கியப் பாடமாக கொள்கிறார்கள் என்று
வைத்துக் கொள்வோம். இங்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள் இந்திய வரலாற்றை
அடிப்படையாகக் கொண்ட கல்லூரிகளில் உள்ள வரலாற்று மாணவர்களுக்கு பாடம்
எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த திட்டத்தை செயல் படுத்தப்படுவதற்காக கலை-அறிவியல் படிப்புகளுக்கு 8
முதன்மைக் குழுக்களும், கல்வியியல் படிப்புக்கு ஒரு குழுவும் விரைவில்
அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரியில்
உள்ள பாடத்திட்டத்தை ஆராய் வதற்காக அவற்றின் பாடத்
திட்டத்தைகேட்டிருந்தோம்.
இதுவரை 80 சதவீத கல்வி நிறுவனங்கள் எங்களுக்கு பாடத் திட்டத்தை
அனுப்பிவிட்டன. இந்த மாத இறுதிக்குள் பாடத்திட்டம் தொடர்பான
ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் வெவ்வேறு பாடத்திட்டங்களைஆராய்ந்து,
பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்ட வங்கி ஒன்று உருவாக்கப்படும்
என்றார்.

பாரதிதாசன் பல்கலை: முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் எம்.எஸ்சி,
இயற்பியல், கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., பாடனி, எம்.எஸ்சி.,
விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.தேர்வு முடிவுகளை
அறிய விரும்பும் மாணவர்கள்www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப்-2 தேர்வு- வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்" என்ற குமாஸ்தா
நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த
காலி இடங்களை நிரப்ப, மே 18ல் போட்டி தேர்வு நடக்கும் என
டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள்,www.tnpsc.gov.in
என்ற இணையதளம் வழியாக, மார்ச் 5ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். வங்கி
அல்லது அஞ்சலகங்களில்,
கட்டணம் செலுத்த, மார்ச், 7
கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தைபார்வைஇடலாம்

பொதுத் தேர்வு பதிவெண் ஒதுக்கீட்டில் மாற்றம் : தொடருதுதேர்வுத் துறையின்"புதுமை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு
பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பொதுத்
தேர்வுகளில், அடுத்தடுத்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.
தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுக்கான
விடைத்தாள்,சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுஎழுதியவுடன், தேர்வுமையத்திலேயே, மாணவர்
பெயர்,பள்ளிபெயர், பதிவெண் பகுதியை,அறைகண்காணிப்பாளர்
கிழித்துவைத்துக்கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய
விடைத்தாளை"பார்கோடிங்' முறையில்மட்டுமே,அடையாளம் காணும் வகையிலும்
மாற்றப்பட்டுள்ளது.மேலும், மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும்முறையிலும்
புதுமைசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்டமையங்களில், வேறுபள்ளிகளைசேர்ந்த
மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில்தேர்வுஎழுதும்
அனைத்துமாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஒரே பள்ளிமாணவர்களுக்கு, அடுத்தடுத்த
தேர்வுஎண்கள், இனிமேல் கிடைக்காது.
இதுகுறித்துகல்விஅதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக,
சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு
மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு
செய்துவிடுகின்றனர். மேலும்,"அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண்
கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு
உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, இயக்குனர்
தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். பதிவெண்களை அவரே
ஒதுக்கீடும் செய்கிறார். வேறு வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார
வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்றார்.

தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி: பணியில் சேர மே மாத இறுதியில்நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி
பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான நியமன ஆணை மற்றும் பணியில் சேரும்
காலத்தை மே மாத இறுதியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று முதல்-அமைச்சருக்குகோரிக்கைவிடுக்கப் பட்டுஉள்ளது.
கோரிக்கை மனு
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை தலைவர் அபூபக்கர்
சித்திக், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில்
கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு செய்திருப்பதை
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்புபேரவை வரவேற்கிறது. தனியார்
பள்ளிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தான் இந்த தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தான் அரசு பள்ளி ஆசிரியர்களாக
பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முழு ஆண்டு தேர்வுகள்
தற்போது தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத்தை முழுமையாக நடத்தி முடித்து,
திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய நிலையில்
பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து
விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் அறிவித்தல், மாணவர்கள்
இடமாற்றம், புதிய மாணவர்கள் சேர்க்கை என்று அனைத்து பள்ளி சார்
நிகழ்வுகளும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெற வேண்டி உள்ளது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து
ஆசிரியர்களும் பள்ளிகளில் பணியில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அரசு
அறிவிப்பு மற்றும் பணி நியமனத்தின் காரணமாக ஆசிரியர்கள் தனியார்
பள்ளிகளில் இருந்து இடையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாண வர்கள்
மற்றும் பள்ளிநிர்வாகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
மே மாத இறுதியில் எனவே புதிய ஆசிரியர்கள் நியமன ஆணைகள் மற்றும் பணியில்
சேரும் காலம் ஆகியவை மே மாத இறுதியில் உள்ளவாறு அமைந்தால் தனியார் பள்ளி
மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும். அத்துடன் தனியார் பள்ளி
நிர்வாகங்களின் சிரமங்களும் தவிர்க்கப்படும். தமிழக முதல்-அமைச்சர்
இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அபூபக்கர் சித்திக்தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பட்ஜெட்: பள்ளிக் கல்விக்கென 19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு, மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்குலேட்டர்

மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை
முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசுப்
பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்தி
வருகிறது.
கூடுதல்கட்டிடங்கள், கழிவறை
, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படைகட்டமைப்பு பணிகளுக்காக
நிதியை ஒதுக்கி வருகிறது. மேலும்,
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில்
14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 92
லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில், பள்ளிக் கல்விக்கென ரூ.16 ஆயிரம்
கோடியை அரசு ஒதுக்கியது. இந்தாண்டு19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு
செய்துள்ளதாக தெரிகிறது. அதற்காக கூடுதலாக இலவச லேப்டாப், நோட்டுகள்,
காலணிகள், ஜியாமென்டரி பாக்ஸ்,
கலர் பென்சில்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் கூடுதலாக மேலும் சில
பொருட்களை வழங்க அரசுஆலோசித்துவருகிறது.
அதில் அறிவியல் மற்றும் கணக்கு பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வரும்
மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், இலவச சயின்ட்டிபிக் கால்குலேட்டர்
குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல்
நிதி மற்றும் இலவச சலுகைகள்குறித்தஅறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில்
வெளியாகும் என்றும்தெரிகிறது.

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்

பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார் 8
லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் விடைத்தாள்
அச்சிடப்படுகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைத்தாள்
அச்சிடப்படுகிறது. இந்த விடைத்தாளில் முகப்புத் தாள் 3
பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் மாணவர்கள் பெயர்,
பதிவு எண், தேர்வு எழுத வேண்டிய பாடம், பள்ளி, தேர்வு நடக்கும் தேதி
ஆகியவை அச்சிட்டே வழங்கப்படும்.
மாணவர்கள் எதுவும் நிரப்பத் தேவையில்லை. மேலும்,
மாணவர்களுக்கான பகுதியில் 3 கட்டங்கள் இடம் பெறுகிறது. அதில் தேர்வு எழுத
வந்தாரா, இல்லையா,
முறைகேடு செய்தாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைதேர்வு அறை
மேற்பார்வையாளர் பூர்த்தி செய்வார். இது தவிர தலைமை கண்காணிப்பாளர்,
அறை மேற்பார்வையாளர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். அடுத்த இடத்தில்
மாணவர் கையொப்பம் மட்டும் போட வேண்டும். மேலும்,
மாணவரின் போட்டோ அதில் இடம் பெற்று இருக்கும். அடுத்துள்ள கீழ் பகுதியில்
விடைத்தாள் திருத்திய பிறகு மதிப்பெண் போட்டது குறித்து குறிப்பிட
வேண்டிய கட்டங்கள் இடம் பெறுகின்றன.
விடைத்தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ள மேல்பகுதி,
கீழ்ப்பகுதி ஆகியவை தேர்வுத் துறையால் கிழிக்கப்பட்டு, பின்னர் டம்மி
எண்கள் போட்டு விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவார்கள். இதன்
மூலம் விடைத்தாளில் எந்த குழப்பமும் வராது. மாணவர்களும் நினைவு மறதியாக
எதை மாற்றி எழுதிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விடைத்தாளில்
முகப்பில் 3 இடங்களிலும் ரகசிய குறியீடுகள் இடம் பெறுகின்றன.

Saturday, February 8, 2014

‘புதைந்திருக்கும்’ மணல்ரகசியம்:

'புதைந்திருக்கும்' மணல்ரகசியம்: வல்லுநர்கள் புதியதகவல்
உலகின் பாரம்பரியச்சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப்பெரியகோயில் முழுக்க முழுக்க மணல் மீட்டுள்ளதுஎன்கின்றன சமீபத்தியஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடிதொலைவில் ஆழ்துளைக் கிணறுதோண்டப்பட்டது.
மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில்சுமார் மூன்று லாரிஅளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்புதெரிவித்ததால் அப்பணிநிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன்தென்னன்மெய்ம்மன் 'தி இந்து'விடம் கூறியதாவது:
கீழே இருமடங்கு சுமை
பெரியகோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும்சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில்கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல்படுகையைக் கொண்டுஉருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இருமடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
அதன்படிஇயற்கையாகஅங்கிருந்த சுக்கான் பாறையைதொட்டியாக வெட்டிஅதில் பரு மணலைநிறைத்து அதன் மீது கோயிலைக்கட்டியிருக்கிறா
ர்கள். கருங்கல்தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போதுமணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்தபாதிப்பும்நேராது.
தலையாட்டிபொம்மைபோல..
தஞ்சைபெரியகோயிலின் ஒருகன அடிகல்லின் எடை70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒருலட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாகசுமார் ஒருகோடி கன அடிபருமணலைகல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.இதன்மூலம் பூமித்தகடுகளின் அசைவின்போதுமணல் அஸ்திவாரம் தன்னைத்தானேசமப்படுத்திக்கொ
ள்ளும். இதனை zerosettlementof foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டிபொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிரவிழாது. தலையாட்டிபொம்மைகளின் பூர்வீகமும்தஞ்சாவூர் என்பதைஇங்கு கவனிக்க வேண்டும்.
இயல்பிலேயேகருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமேபொருத்தமானது. அதனால்தான்பெரும்பாலானகடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறுதோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயேஅங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடிஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான்களிமண் வெளியேறியுள்ளது.
இந்த மணல்தஞ்சாவூர் முகத்துவாரப்பகுதிக்கானமணல் அல்ல. தஞ்சாவூர்பகுதியில் இருப்பதுசமதளத்தில்ஓடும் காவிரிஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்குபெரியபருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில்படியும் மணல். மேற்குத்தொடர்ச்சிமலைகளின் காட்டாற்றுப்படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு பெருந்தச்சன்தென்னன் மெய்ம்மன் கூறினார்.
சிலை, நாணயங்கள் இருக்கலாம்
ஒடிசாமாநிலத்தில் வரலாற்றுக் கோட்டைகளை ஆய்வுசெய்தவரான ஒரிசா பாலு கூறும்போது,நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும்பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறுஅழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தா
ன் பிரமாண்டமானகோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படிபிரமாண்டமாக அமைத்தால்தான்அதன்அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்துபொருட்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, பெரியகோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம்தென் கிழக்குஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக்கட்டுமானக் கலையின் வரலாற்றையும்நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சிநடத்தித்தான்இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற அவசியம்இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Groundpenetratingradar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவிபடங்களைஎடுத்து ஆய்வு செய்யலாம்" என்றார்.
Thanksto
'தி இந்து'

"ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவைபள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது"

"ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின்
விபரங்களைஆன்-லைனில் பதிவேற்றம்செய்வதைஅந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக்
கூடாதுஎனதொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
"ஒன்றிய அளவில்தொடக்கமற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவிதொடக்க கல்வி
அலுவலகத்தில்செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை(இ.எம்.ஐ.எஸ்.,) மூலம்
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. இதை உள்ளீடு
செய்யும்அதிகாரம், அந்தந்த உதவிதொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே
உள்ளது.
ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி கல்விஅலுவலகத்தில்
பராமரிக்கப்படும்,ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டுடன்,சரிபார்த்த பின்னரே,
இணையதளத்தில் உள்ளீடு செய்யவேண்டும். ஆனால், சில ஒன்றியங்களில், துவக்க
மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நேரடியாக உதவி
கல்விஅலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள,"யூசர்ஐ.டி.,
பாஸ்வேர்டு"வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின்
விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது .
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, பல்வேறு
தரப்பில்புகார்சென்றது. இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம்சார்பில்,
மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்குஅனுப்பியுள்ள உத்தரவில்,"தேசிய தகவல்
மையத்தால்,உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள்மட்டுமே, பயன்படுத்தும்வகையில்,
மென்பொருள் கட்டமைப்புவடிவமைக்கப்பட்ட
ுள்ளது. பள்ளி தலைமைஆசிரியர்கள், நேரடியாக அப்பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களின் விபரங்களைஇணையதளத்தில் உள்ளீடு செய்தல்கூடாது.ஒன்றிய
அளவில் செயல்படும் "இ.எம்.ஐ.எஸ்" குழுக்கள் மூலம், மட்டுமே மேற்கொள்ள
வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த புதிய வசதி.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில்
வசிப்பவர்கள், மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தும் புதிய வசதியை
தமிழ்நாடு மின் வாரியம் அமல்படுத்தஉள்ளது.
பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து இந்த புதிய திட்டம் மாநிலம் முழுவதும்
வரிவுப்படுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மின் கட்டணம் செலுத்துவதற்கு பயன்பாட்டில் உள்ள வழிமுறைகளும்
தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த
நாடாளுமன்றக் குழுபரிந்துரை செய்துள்ளது.இந்த பரிந்துரை அறிக்கை
வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப,
ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை
செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Thursday, February 6, 2014

2,269 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2-ஏ தேர்வு அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப் 2- ஏ தேர்வு மே மாதம் 18ஆம்
தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பம் இன்று முதல்
அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும். டி.என்.பி.எஸ்.சி
இணையதளத்தில் சென்று இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை அஞ்சலகம் அல்லது வங்கி மூலம் செலுத்தலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத்துறையிலுள்ள,2 ஆயிரத்து 269
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.எழுத்தர்,
உதவியாளர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது. நேர்காணல் இல்லாமல்
எழுத்துத் தேர்வு மூலம் தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த
தேர்வினை எழுத பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

TNTET GO Issue

Tnptfkallakurichi banner 2013

Wednesday, February 5, 2014

பிறப்பு, இறப்புச்சான்றிதழ் பெறுவதுஎப்படி?

இந்தியச் சட்டப்படிகுடும்பஅட்டை, ஓட்டுநர்உரிமம், வாக்காளர் அடையாள
அட்டைமுதல் பாஸ்போர்ட் வரை அனைத்துஆவணங்களையும் பெற வயதுச்சான்றாகப்
பயன்படுவதுபிறப்புச்சான்றிதழ். ஏன், திருமணத்திற்கேகூட வயதுச்
சான்றிதழ்கட்டாயமாகிறது. அதேபோலவாரிசுகளின் உரிமை, சொத்துரிமை,
அரசுசலுகைகள் போன்றவற்றைப்பெற இறப்புச் சான்றிதழ்அவசியமாகிறது. இத்தனை
முக்கியத்துவம் வாய்ந்த பிறப்புமற்றும் இறப்புச்
சான்றிதழ்களைப்பெறுவதுஎப்படி? விவரங்கள் இங்கே...
பிறப்பைப் பதிவுசெய்வதுகட்டாயமா?
பல்வேறு விஷயங்களுக்காகப் பிறந்த தேதியைஆவணப்படுத்துவது கட்டாயமாகிறது.
இந்தியாவில், 1969-ஆம் ஆண்டு பிறப்புமற்றும்
இறப்புபதிவுச்சட்டப்படி,பிறந்த ஒவ்வொரு குழந்தையும்21 தினங்களுக்குள்
பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். அதற்காக, கிராம/நகரப்
பதிவுத்துறை,மாவட்டப் பதிவுத்துறை,மாநில பதிவுத்துறை, மத்திய
பதிவுத்துறைஎனச் சிறப்பாகக் கட்டமைத்து இணைக்கப்பட்ட
பொதுப்பதிவுத்துறையைஇந்திய அரசுஏற்படுத்தியுள்ளது.
எங்கே பதிவுசெய்வது?
ஒருவர்பிறப்புச்சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியைப்பதிவுத் துறையில்
பதிவுசெய்திருக்க வேன்டும். பதிவுஅதிகாரியிடமிருந
்துபெறப்பட்ட பதிவுவிண்ணப்பப்படிவம்வாயிலாக, குழந்தை பிறந்த 21
தினங்களுக்குள் சம்பந்தப்பட்டஏரியாவிலுள்ள பதிவுஅதிகாரியிடம்
பிறப்பைபதிவுசெய்யவேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளில
ிருந்து பெறப்பட்டஆவணங்களின் அடிப்படையில்,உரிய
பரிசீலனைக்குப்பின்னர்பிறப்புச் சான்றிதழ்வழங்கப்படும்.
ஒருவேளை குறிப்பிட்ட21 நாட்களுக்குள் பதிவுத்துறையில்
பிறப்புபதிவுசெய்யப்படவில்லை என்றாலோஅல்லதுவீடுகளில்
பிறப்புநடந்திருந்தாலோ, அந்தப் பகுதி காவல்துறைமூலம்
பிறப்புஉறுதிசெய்யப்பட்டபின்னர் பதிவுத்துறைஅதிகாரிகளால்பிறப்புச்
சான்றிதழ்வழங்கப்படுகிறது.
எத்தனைநாட்களுக்குள் பதிவுசெய்யப்படவேண்டும்?
பிறப்பை21 நாட்களுக்குள்ளும், இறப்பைஒருவாரத்திற்குள்ளும் பதிவுசெய்யவேண்டும்.
பிறப்புஅல்லதுஇறப்பிற்குப்பின்னர் ஐந்து அல்லதுஅதற்கும் மேற்பட்ட
ஆண்டுகள் ஆகிவிட்டால்பிறப்புச் சான்றிதழ்அல்லதுஇறப்புச்
சான்றிதழைசம்பந்தப்பட்டபகுதியின் சார்பதிவாளர்அலுவலகத்தில்தான் பெற
முடியும். நகரம் அல்லதுமாநகரம் என்றால், நகராட்சி அல்லதுமாநகராட்சி
அலுவலகத்தில்பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
கட்டணவிவரம்:
மூன்று வாரங்களுக்குள் இலவசமாகவும், அதற்குமேல் ஒருமாதம் வரை 5 ரூபாயும்,
ஓராண்டிற்குமேல் ரூபாய்10/- மற்றும் மாவட்டநீதிபதிஅவர்களின் ஆணையும்
தேவை.
மருத்துவமனையில் பிறப்பைபதிவுசெய்தல்:
மருத்துவமனையில்நடக்கும் பிறப்புகள் அனைத்தும் மாநகராட்சிக்கு தெரிவிக்கப்படும்.
மருத்துவமனைசான்று கிடைத்தவுடன் ஒரே நாளில்
மாநகராட்சியால்பிறப்புச்சான்று வழங்கப்படும்.
பிறப்புச்சான்றைஅந்தந்த மாநகராட்சியின் இணையதளத்தில் இலவசமாகப்பெறமுடியும்.
குழந்தையின் பெயரை ஓராண்டு வரைமாநகராட்சி அலுவலகத்தில்பதிவுசெய்யலாம்.
எத்தனைநகல்கள் பெற முடியும்?
இச்சான்றிதழ்எத்தனைநகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காகஉரிய
கட்டணங்கள்கட்ட வேண்டியிருக்கும்.இதற்காக, ஒருதனிவெள்ளைத்தாளில்
ஒருவேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில்
இரண்டுரூபாய்க்கானநீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கானசான்றுகளாக
மனுதாரரின் குடும்ப அட்டைஅல்லதுஏதாவதுமுகவரிச் சான்று, குழந்தையின்
பெயருடன் கூடிய பள்ளிச் சான்றுபோன்றவற்றை இணைத்து
விண்ணப்பித்தால்வட்டாட்சியர் அவ்விண்ணப்பத்தின்மீதுஉரிய விசாரணைசெய்து,
வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும்பட்சத்தில், குறிப்பிட்டசார்பதிவாளர்
அலுவலகத்தில்உள்ள பிறப்புப் பதிவேட்டைவட்டாட்சியர்
அலுவலகத்திற்கேவரவழைத்துப் பெயர்பதிவுசெய்துமீண்டும் அப்பதிவேட்டைஅந்தச்
சார்பதிவாளர் அலுவலகத்திற்கேஅனுப்பிவைப்பார்.
பிறப்பு/ இறப்புச்சான்றிதழ்களில் மாற்றங்கள்
பெற்றோர்சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவுசெய்யும்அலுவலர்ஏதேனும்
தவறு செய்திருந்தால்மட்டும், பதிவுசெய்கையில்பெற்றோர் அளித்த
விண்ணப்பத்தில்உள்ள தகவல்களைப்பரிசோதித்துவிட்
டு அதைமாற்றித்தருவர்.
அப்படியானசூழலில்சரியான தகவல்களை ஆதாரத்துடன்அளித்து,
திருத்தங்கள்செய்யவேண்டுகோள் கடிதம் கொடுக்கவேண்டும்.
குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில்மாற்ற முடியுமா?
பிறந்த குழந்தையின் தாய், தந்தையர் அல்லதுமுகவரியில்ஏதேனும் தவறு
இருந்தால், அதைச்சரியான சான்றுகள் அளித்துமாற்றிக் கொள்ளலாம்;
அதேவேளையில் குழந்தையின் பெயரில்ஏதேனும் மாற்றம் தேவையென்றால்
அப்படிமாற்ற முடியாது.எனவே, குழந்தையின் பெயரை உறுதிசெய்த பின்னரே அதை
பிறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யவேண்டும். ஒருமுறை பதிவுசெய்துவிட்டால்,
அதை மாற்றுவதுஅவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பதிவானபின்குழந்தையின்
பெயர் மாற்றப்படமாட்டாது.பதிவான பெயரை அரசுகெஜட் மூலமே மாற்ற முடியும்.
இந்தியபெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால்:
இந்தியாவில் உள்ள ஒருகணவனும் மனைவியும் பணி நிமித்தமாக
அல்லதுகுழந்தைப்பேறுமருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள
ஒருமருத்துவமனையில் மருத்துவம் பார்த்துஅங்கேயேகுழந்தை பெற்றுக்கொண்டால்,
அக்குழந்தையின் பிறப்பைஅங்குள்ள தூதரகஅலுவலகம் வாயிலாகப்
பதிவுசெய்யவேண்டும்.
ஒருவர்கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிர
ுக்கும்போது அவருக்குஉயர் மருத்துவக்காரணங்களுக்காக அவருடையஉறவினர்கள்
வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.
அப்படிவெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ
நடவடிக்கைகளின்போது அந்தநபர் இறந்து விட்டால்,அங்குள்ள தூதரகம்வாயிலாகப்
பதிவுசெய்துசான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பயணத்தின்போதுகுழந்தைபிறந்தால்:
பிறப்புமற்றும் இறப்புப் பதிவுஎன்பதுஒவ்வொருவரின் சொந்த ஊரில்
அல்லதுநிலையான இருப்பிடத்தில்தான்பதிவுசெய்யப்பட வேண்டும் என்று
பலர்நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதவறு. ஒருகுழந்தை எங்குபிறக்கிறதோ
அங்குதான் அதன் பிறப்புபதிவுசெய்யப்படவேண்டும். அதே போல், ஒருவர் இறந்து
விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோஅங்குதான் அவரதுஇறப்புபதிவுசெய்யப்பட
வேண்டும்.
விமானத்தில் அல்லதுகப்பலில் பயணிக்கும்போதுகுழந்தை பிறந்தால்
அல்லதுஒருவர்இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு
முடிகிறதோஅங்குதான் அந்தப் பிறப்புஅல்லதுஇறப்புபதிவு
செய்யப்படவேண்டும்.எரிபொருள் நிரப்ப அல்லதுஅச்சுறுத்தல் காரணமாக
அந்தவிமானம் அல்லதுகப்பல் ஏதாவதுஒருநிலையில்
நிறுத்தப்பட்டால்அதைப்பற்றிஎந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை
அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார
்களோ அங்குதான்பதிவுசெய்ய வேண்டும்

பிறப்பு, இறப்புச்சான்றிதழ் பெறுவதுஎப்படி?

இந்தியச் சட்டப்படிகுடும்பஅட்டை, ஓட்டுநர்உரிமம், வாக்காளர் அடையாள
அட்டைமுதல் பாஸ்போர்ட் வரை அனைத்துஆவணங்களையும் பெற வயதுச்சான்றாகப்
பயன்படுவதுபிறப்புச்சான்றிதழ். ஏன், திருமணத்திற்கேகூட வயதுச்
சான்றிதழ்கட்டாயமாகிறது. அதேபோலவாரிசுகளின் உரிமை, சொத்துரிமை,
அரசுசலுகைகள் போன்றவற்றைப்பெற இறப்புச் சான்றிதழ்அவசியமாகிறது. இத்தனை
முக்கியத்துவம் வாய்ந்த பிறப்புமற்றும் இறப்புச்
சான்றிதழ்களைப்பெறுவதுஎப்படி? விவரங்கள் இங்கே...
பிறப்பைப் பதிவுசெய்வதுகட்டாயமா?
பல்வேறு விஷயங்களுக்காகப் பிறந்த தேதியைஆவணப்படுத்துவது கட்டாயமாகிறது.
இந்தியாவில், 1969-ஆம் ஆண்டு பிறப்புமற்றும்
இறப்புபதிவுச்சட்டப்படி,பிறந்த ஒவ்வொரு குழந்தையும்21 தினங்களுக்குள்
பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். அதற்காக, கிராம/நகரப்
பதிவுத்துறை,மாவட்டப் பதிவுத்துறை,மாநில பதிவுத்துறை, மத்திய
பதிவுத்துறைஎனச் சிறப்பாகக் கட்டமைத்து இணைக்கப்பட்ட
பொதுப்பதிவுத்துறையைஇந்திய அரசுஏற்படுத்தியுள்ளது.
எங்கே பதிவுசெய்வது?
ஒருவர்பிறப்புச்சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியைப்பதிவுத் துறையில்
பதிவுசெய்திருக்க வேன்டும். பதிவுஅதிகாரியிடமிருந
்துபெறப்பட்ட பதிவுவிண்ணப்பப்படிவம்வாயிலாக, குழந்தை பிறந்த 21
தினங்களுக்குள் சம்பந்தப்பட்டஏரியாவிலுள்ள பதிவுஅதிகாரியிடம்
பிறப்பைபதிவுசெய்யவேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளில
ிருந்து பெறப்பட்டஆவணங்களின் அடிப்படையில்,உரிய
பரிசீலனைக்குப்பின்னர்பிறப்புச் சான்றிதழ்வழங்கப்படும்.
ஒருவேளை குறிப்பிட்ட21 நாட்களுக்குள் பதிவுத்துறையில்
பிறப்புபதிவுசெய்யப்படவில்லை என்றாலோஅல்லதுவீடுகளில்
பிறப்புநடந்திருந்தாலோ, அந்தப் பகுதி காவல்துறைமூலம்
பிறப்புஉறுதிசெய்யப்பட்டபின்னர் பதிவுத்துறைஅதிகாரிகளால்பிறப்புச்
சான்றிதழ்வழங்கப்படுகிறது.
எத்தனைநாட்களுக்குள் பதிவுசெய்யப்படவேண்டும்?
பிறப்பை21 நாட்களுக்குள்ளும், இறப்பைஒருவாரத்திற்குள்ளும் பதிவுசெய்யவேண்டும்.
பிறப்புஅல்லதுஇறப்பிற்குப்பின்னர் ஐந்து அல்லதுஅதற்கும் மேற்பட்ட
ஆண்டுகள் ஆகிவிட்டால்பிறப்புச் சான்றிதழ்அல்லதுஇறப்புச்
சான்றிதழைசம்பந்தப்பட்டபகுதியின் சார்பதிவாளர்அலுவலகத்தில்தான் பெற
முடியும். நகரம் அல்லதுமாநகரம் என்றால், நகராட்சி அல்லதுமாநகராட்சி
அலுவலகத்தில்பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
கட்டணவிவரம்:
மூன்று வாரங்களுக்குள் இலவசமாகவும், அதற்குமேல் ஒருமாதம் வரை 5 ரூபாயும்,
ஓராண்டிற்குமேல் ரூபாய்10/- மற்றும் மாவட்டநீதிபதிஅவர்களின் ஆணையும்
தேவை.
மருத்துவமனையில் பிறப்பைபதிவுசெய்தல்:
மருத்துவமனையில்நடக்கும் பிறப்புகள் அனைத்தும் மாநகராட்சிக்கு தெரிவிக்கப்படும்.
மருத்துவமனைசான்று கிடைத்தவுடன் ஒரே நாளில்
மாநகராட்சியால்பிறப்புச்சான்று வழங்கப்படும்.
பிறப்புச்சான்றைஅந்தந்த மாநகராட்சியின் இணையதளத்தில் இலவசமாகப்பெறமுடியும்.
குழந்தையின் பெயரை ஓராண்டு வரைமாநகராட்சி அலுவலகத்தில்பதிவுசெய்யலாம்.
எத்தனைநகல்கள் பெற முடியும்?
இச்சான்றிதழ்எத்தனைநகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காகஉரிய
கட்டணங்கள்கட்ட வேண்டியிருக்கும்.இதற்காக, ஒருதனிவெள்ளைத்தாளில்
ஒருவேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில்
இரண்டுரூபாய்க்கானநீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கானசான்றுகளாக
மனுதாரரின் குடும்ப அட்டைஅல்லதுஏதாவதுமுகவரிச் சான்று, குழந்தையின்
பெயருடன் கூடிய பள்ளிச் சான்றுபோன்றவற்றை இணைத்து
விண்ணப்பித்தால்வட்டாட்சியர் அவ்விண்ணப்பத்தின்மீதுஉரிய விசாரணைசெய்து,
வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும்பட்சத்தில், குறிப்பிட்டசார்பதிவாளர்
அலுவலகத்தில்உள்ள பிறப்புப் பதிவேட்டைவட்டாட்சியர்
அலுவலகத்திற்கேவரவழைத்துப் பெயர்பதிவுசெய்துமீண்டும் அப்பதிவேட்டைஅந்தச்
சார்பதிவாளர் அலுவலகத்திற்கேஅனுப்பிவைப்பார்.
பிறப்பு/ இறப்புச்சான்றிதழ்களில் மாற்றங்கள்
பெற்றோர்சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவுசெய்யும்அலுவலர்ஏதேனும்
தவறு செய்திருந்தால்மட்டும், பதிவுசெய்கையில்பெற்றோர் அளித்த
விண்ணப்பத்தில்உள்ள தகவல்களைப்பரிசோதித்துவிட்
டு அதைமாற்றித்தருவர்.
அப்படியானசூழலில்சரியான தகவல்களை ஆதாரத்துடன்அளித்து,
திருத்தங்கள்செய்யவேண்டுகோள் கடிதம் கொடுக்கவேண்டும்.
குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில்மாற்ற முடியுமா?
பிறந்த குழந்தையின் தாய், தந்தையர் அல்லதுமுகவரியில்ஏதேனும் தவறு
இருந்தால், அதைச்சரியான சான்றுகள் அளித்துமாற்றிக் கொள்ளலாம்;
அதேவேளையில் குழந்தையின் பெயரில்ஏதேனும் மாற்றம் தேவையென்றால்
அப்படிமாற்ற முடியாது.எனவே, குழந்தையின் பெயரை உறுதிசெய்த பின்னரே அதை
பிறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யவேண்டும். ஒருமுறை பதிவுசெய்துவிட்டால்,
அதை மாற்றுவதுஅவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பதிவானபின்குழந்தையின்
பெயர் மாற்றப்படமாட்டாது.பதிவான பெயரை அரசுகெஜட் மூலமே மாற்ற முடியும்.
இந்தியபெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால்:
இந்தியாவில் உள்ள ஒருகணவனும் மனைவியும் பணி நிமித்தமாக
அல்லதுகுழந்தைப்பேறுமருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள
ஒருமருத்துவமனையில் மருத்துவம் பார்த்துஅங்கேயேகுழந்தை பெற்றுக்கொண்டால்,
அக்குழந்தையின் பிறப்பைஅங்குள்ள தூதரகஅலுவலகம் வாயிலாகப்
பதிவுசெய்யவேண்டும்.
ஒருவர்கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிர
ுக்கும்போது அவருக்குஉயர் மருத்துவக்காரணங்களுக்காக அவருடையஉறவினர்கள்
வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.
அப்படிவெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ
நடவடிக்கைகளின்போது அந்தநபர் இறந்து விட்டால்,அங்குள்ள தூதரகம்வாயிலாகப்
பதிவுசெய்துசான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பயணத்தின்போதுகுழந்தைபிறந்தால்:
பிறப்புமற்றும் இறப்புப் பதிவுஎன்பதுஒவ்வொருவரின் சொந்த ஊரில்
அல்லதுநிலையான இருப்பிடத்தில்தான்பதிவுசெய்யப்பட வேண்டும் என்று
பலர்நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதவறு. ஒருகுழந்தை எங்குபிறக்கிறதோ
அங்குதான் அதன் பிறப்புபதிவுசெய்யப்படவேண்டும். அதே போல், ஒருவர் இறந்து
விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோஅங்குதான் அவரதுஇறப்புபதிவுசெய்யப்பட
வேண்டும்.
விமானத்தில் அல்லதுகப்பலில் பயணிக்கும்போதுகுழந்தை பிறந்தால்
அல்லதுஒருவர்இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு
முடிகிறதோஅங்குதான் அந்தப் பிறப்புஅல்லதுஇறப்புபதிவு
செய்யப்படவேண்டும்.எரிபொருள் நிரப்ப அல்லதுஅச்சுறுத்தல் காரணமாக
அந்தவிமானம் அல்லதுகப்பல் ஏதாவதுஒருநிலையில்
நிறுத்தப்பட்டால்அதைப்பற்றிஎந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை
அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார
்களோ அங்குதான்பதிவுசெய்ய வேண்டும்

இலவசகையேடு: அனைத்துபள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு:

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அதிகமதிப்பெண்பெறும் வகையில் பள்ளிக்
கல்வித்துறைதயாரித்த இலவசகையேடு,அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட
உள்ளது.அனைத்துப் பள்ளிகளிலும், கடந்த பருவத்தேர்வில்,10 ம்
வகுப்புமற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சிசதவீதத்தை,
கல்வித்துறைஆய்வுசெய்தது. இதன்படி,குறைந்த மதிப்பெண்பெற்றவர்

Fwd: பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியீடு

2013ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பி.எட்., எம்.எட்., துணைத்
தேர்வுமுடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.
பி.எட்., எம்.எட்.துணைத் தேர்வுமுடிவை www.tnteu.in என்ற இணையதளத்தில்அறியலாம்.
தேர்வில் தவறியவர்கள் ஜூன் மாதம் நடக்க உள்ள தேர்வில் கலந்துக்கொள்ள
பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடுஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Reservation

இட ஒதுக்கீடு என்ற ஒருசரத்தைசட்டமாகஇயற்றியதால் தான்ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண்சலுகை கோரி போராட முடிந்தது.அதன் விளைவாக இன்று BC,MBC,SC,ST என்ற அனைத்து பிரிவினருக்கும்5% மதிப்பெண்சலுகை கிடைக்கப்பெற்று
ள்ளது.இதன் காரணகர்த்தாவான அம்பேத்கர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்
..இப்போதாவதுநாம் புரிந்துகொள்ள வேண்டும் அண்ணல்sc st க்கு மட்டும் சட்டத்தில் இடஒதுக்கீடுவழங்கவில்லை.FC அல்லாத(SC,ST,BC)அனைவருக்கும் என்பதை,,,,,

முதுகலை வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தமிழ்வழிபிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), வெளியிட்டுள்ளது

முதுகலை வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தமிழ்வழி பிரிவில்
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,), வெளியிட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் தேர்வில், இந்திய
கலாசாரம் மற்றும் மனையியல் பாடம் மற்றும் வரலாறு, பொருளியல், வணிகவியல்
ஆகிய பாடங்களில், தமிழ்வழி பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியலை, wwww.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில், டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது.

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு :50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தால் மத்திய அரசுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தகவல்

50 per cent DAin the basicpay is set to merge soon Govt. exercises to
attract 38 lakh workers, 25 lakh pensioners 20 thousand crore
additional burden on the exchequer Govt eyeson approximately 2 and
half crore votes of Central government employeesand pensioners
andtheir families. Govtis preparingto merge 50 per cent dearness
allowance (DA) into the basic pay to attracted approximately 38 lakh
employeesand 25 lakhpensioners.
Thatwould bein the next fortnight. If it happen, extra burden would
cost of Rs 20,000 crore to the exchequer.
It may be pressure of employees of Trade Union/ threatening of
indefinite strike by the central govt. employees withrailway employee
or it may be trial of attraction of 2.5 carores of voters. Infact D.A.
is being merged with basic salary.TheSecretary Generalof the AIRF Mr.
Shiva Gopal Mishra who is representing nearly 12 lakh employees says
last days, that he had correspondenced with the Prime Minister's
Office and the Finance Ministry. He also met with Secretary of
expenditurein thisconnection.
This indicates that it will be announced just after the vote on
account of parliament. Press Secretary of National Federation of
Indian Railwaymen Mr. S.N. Malik said that the Cabinetnote in this
regard has become according to PMO sourcese.There is a file lying
inthe PMO at this time regarding this connection. It will be announced
someday next week when Parliament is insession.
Infact DA of Central Govt. Employees reached up to 90% at this time
and again due started with DA increment from 1st Jan. If this time
there is an increaseof 11 percent on DA; it will be 101 per cent .
Maliksaysthat when the Fifth CPC DA had reached 72 per cent, 50 per
cent DA was merged with basic paywithoutany demandfrom staff side.
This time it is not being done. This demandof merger of 50 percent of
DA into basic pay DA of the unions is old. In view of this, , Minister
of State for Finance Namo Narain Meena said in Parliamentstatedin
Augustlastyear that Sixth Pay Commission has not recommended to merge
the DA with basic pay . So the government is not doing so. However ,
now the situation has changed, in the view of general election, to woo
the all the public the decisionsare being taken. In this series, if DA
has to be merged with the basic pay, thenthe exchequer putaburden of
Rs20,000 crore is estimated

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

குழந்தைகள் பாதுகாப்புமற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம்
முழுவதும்40ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சிவழங்கப்பட
உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவன இயக்குநர்
எஸ்.கண்ணப்பன் கூறினார். மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிஆசிரியர்களுக்குஇந்தப் பயிற்சிவழங்கப்பட உள்ளது. கட்டாயக்
கல்விஉரிமைச் சட்டத்தின்ஒருபகுதியாக இந்தப்
பயிற்சிதரப்படுகிறது.குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள்,
அவர்களைஎப்படிக் கையாள்வதுஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களில்
ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படஉள்ளன.யுனிசெஃப் மற்றும் துளிர்
உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்துஇந்தப் பயிற்சியின் போதுஆசிரியர்களுக்கு
வழங்குவதற்கானகையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் பாலியல்
கொடுமைக்குள்ளானது குறித்து தெரியவந்தால் அவற்றைஎவ்வாறுஅணுக வேண்டும்,
புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளின்மன
நிலையைப்புரிந்துகொள்ளுதல், அவர்களுக்குள்ளஉரிமைகளைத் தெரிந்துகொள்ளுதல்,
எதுபாலியல் கொடுமைஎன்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள்இதில்
இடம்பெற்றுள்ளன.பிப்ரவரி 6,7-ல் பயிற்சி: மாநில அளவிலான
கருத்தாளர்களுக்கு வியாழன்(பிப்.6), வெள்ளிக்கிழமைகளில் (பிப்.7)
சென்னையில் பயிற்சிவழங்கப்படுகிறது.அதன்பிறகு, மாவட்ட மற்றும்
வட்டாரஅளவில்ஆசிரியர்களுக்குப் பயிற்சிவழங்கப்படும். இந்த
மாதத்துக்குள்40ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப்
பயிற்சிவழங்கப்படும்என கண்ணப்பன் தெரிவித்தார்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு

பிப்.24ல் பணி நியமன உத்தரவு? ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு
முடித்தவர்களுடன், தற்போதுமதிப்பெண் சலுகை மூலம் புதியபட்டியலில்
இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும்அடுத்த இருவாரங்களுக்குள்
சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.பின்னர் வேலை நியமன உத்தரவுதயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த
கல்விஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்படஉள்ளவர்கள் விபரம்
அறிவிக்கப்படும். இவர்கள் அனைவருக்கும்வரும் 24ம் தேதி (ஜெயலலிதா
பிறந்தநாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்துஆசிரியர் பணி நியமன
உத்தரவுவழங்கப்படலாம் என தெரிகிறது. எஸ்சி, எஸ்டிக்குகூடுதல்
வாய்ப்புகடந்த 2012ம் ஆண்டு நடந்ததேர்வில் எஸ்சி., எஸ்டிபிரிவில்
அதிகதேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர்கள்பிரிவில் 400 காலி
பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போதுஇடஒதுக்கீடு பிரிவினருக்குசிறப்பு
வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்குகூடுதல்
வாய்ப்புகிடைக்க வழிஏற்பட்டுள்ளது.

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதிதீர்ப்பு இன்றுகாலை சற்று முன்
வெளியாகியுள்ளது. இன்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள்
மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய
அமர்வு தீர்ப்புவழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாதுஎனவும், பணி
நியமனம் மற்றும் பதவிஉயர்விற்கு இனி மூன்று வருட
பட்டப்படிப்புமட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்துதொடரப்பட்ட மனு
தள்ளுபடிசெய்யப்படுகிறது என நீதியரசர்கள்தங்களதுதீர்ப்பில் தெரிவித்தனர்.
ஒருவருட பட்டம் சார்பான அனைத்துவழக்குகளும் தள்ளுபடிசெய்யப்பட்டது.
தீர்ப்புநகல் நாளைமறுநாள் வெளியாகும்என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்
இத்தீர்ப்புசார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்
என்றுதெரிவிக்கப்படுகிறது.

Monday, February 3, 2014

ஆசிரியர்தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி
மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார். எனவே, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீத
மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முழு மதிப்பெண் 150. இதில் இதில் 55
சதவீதம் என்பது 82.5 மதிப்பெண்களாகும். தகுதித் தேர்வை பொருத்தவரையில்,
ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அரை மதிப்பெண் என்று
எதுவும் கிடையாது. 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில், 150-க்கு 82.5
மதிப்பெண் எடுத்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். தேர்வில் அரை
மதிப்பெண் இல்லாததால் தேர்ச்சி மதிப்பெண்ணை கணக்கிடுவதுசிரமமாக
இருக்கும். எனவே, தேர்ச்சி மதிப்பெண் 83 ஆக உயர்த்தப்படுமா அல்லது 82
மார்க் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,
''குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 83 அல்லது 82 என்பதை அரசுதான்
தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்த விவரங்களைஅரசு வெளியிடஉள்ள ஆணையில்
எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.
சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளுக்கான
தகுதித் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.)
நடத்துகிறது. இதில் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை
அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி
பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
''மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சி.டெட்) இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்பது 82 என்று
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 82 மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு
தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்று பொதுப்பள்ளிக்கான மாநில
மேடை பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
கடந்தஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள்
12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும் 60சதவீத மதிப்பெண்
பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பணிநிய மனத்துக்காக
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கும் நடத்திமுடிக்கப்பட்டுவிட்டது.
தற்போது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம்
குறைக்கப்பட்டு இருப்பதால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு
சென்றுவந்தவர்கள், தற்போதைய அறிவிப்பால், பணி நியமனம் தாமதம் ஆகுமோ என்ற
கவலையில் உள்ளனர்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம்
குறைக்கப்பட்டு இருப்பதால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

ஒரே நாளில்20 ஆயிரத்து920 ஆசிரியர்களுக்குபணி நியமன ஆணை-சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்.

ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை-சட்டசபையில்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்.கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில்
68 ஆயிரத்து 481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதுநாள் வரை 51 ஆயிரத்து757 ஆசிரியர்கள், இடஒதுக்கீட்டு முறையில்
பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு
பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு.
ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இதுவரை, 19 ஆயிரத்து 673 பணியிடங்களுக்கு
என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 ஆயிரத்து 220 பணியிடங்கள்
நிரப்பப்பட்டு உள்ளன.என தமிழக முதல்வரின் சட்டசபையில் உரையாற்றியுள்ளர்.
எனவே எஞ்சியுள்ள 16,714 அனைத்துவகை ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என தெரியவருகின்றது.

ஆசிரியர்தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண்
சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை
தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின
மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு
தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர்தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றதுடிஆர்பி

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக
மதிப்பெண்களாககுறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர்,
பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்துஇப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால்
போதுமானது.2013ம்ஆண்டு தேர்வுஎழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும்
தெரிவித்தார்.இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில்முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன்
தொடர்பணிகளைமேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

ஆங்கில வழிக் கல்வி ஏன்?- பேரவையில் முதல்வர் விளக்கம்

ஆங்கில வழிக் கல்வியைக் குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக்
கல்வியில் படிக்க வைத்தார்களா? என்றுசட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா
கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "எனது
தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களைகொடுத்து மக்களை
ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பயனற்ற இலவசங்களைகொடுத்து மக்களை
ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே
சட்டமன்றத்தில் பேசினேன்.
இதைப் புரிந்து கொண்ட மக்கள், 2011 ஆம் ஆண்டு அவ்வாறு ஏமாற்றியவர்களை
தூக்கி எறிந்தார்கள். மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டுமென்றால், மாநிலம்
செழிக்க வேண்டுமென்றால், மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த
வேண்டும். இந்த கொள்கையைத்தான் எனது அரசு பின்பற்றி வருகிறது. எனவே தான்,
எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக் கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய
இரண்டுக்கும் நான் முக்கியத்துவம் அளித்துவருகிறேன்.
நடப்பு நிதியாண்டில், பள்ளிக் கல்விக்கென 16,965 கோடியே 37 லட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு, முந்தைய
மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை
11,274 கோடியே 75 லட்சம் ரூபாய் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு. விலையில்லா பாடப் புத்தகங்கள்,
நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள்,
கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள்,
புவியியல் வரைபடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று முதல்
பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, கட்டணமில்லா
பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில்
பயிலும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல வசதியாக
விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினிகளும்
வழங்கப்படுகின்றன.
இடை நிற்றலைக் குறைக்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ
மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ
மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தத் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு
நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வியை
முடித்தவுடன் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இந்தத்
திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட 23 லட்சம் மாணவ, மாணவியர் பயன்
அடைந்துள்ளனர்.
வருவாய் ஈட்டும் பெற்றோரை இழக்க நேரிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் கல்விஎவ்விதத்திலும்பாதிக்கப்படக்
கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெயர்களில் 50,000 ரூபாய்
பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடந்தஇரண்டரை ஆண்டுகளில் 1,080 மாணவ மாணவியர் பயன்
அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துச் செல்லும் மாணவ
மாணவியர் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு
அலுவலகங்களுக்குச் சென்று அலைவதை தவிர்க்கும் வகையில், இந்தப்
வேலைவாய்ப்பு பதிவு முறையை பள்ளிகளிலேயே நாங்கள் அறிமுகப்படுத்தி
இருக்கிறோம். இதேபோன்று சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருவாய்
சான்றிதழ் ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் இடமிருந்து பள்ளித்
தலைமை ஆசிரியர் பெற்று மாணவ, மாணவியருக்கு வழங்கும் முறையும்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர் மன அழுத்தமின்றி, தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் கல்வி
கற்க ஏதுவாக, முப்பருவ முறை திட்டம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு
பாடநூல் வழங்கப்படுவதால், மாணவ மாணவியரின் கடுமையான புத்தகச் சுமை
குறைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களது படைப்புச் சிந்தனை மற்றும் திறன்களை
வளர்க்கும் செயல்பாடுகள் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் மன
அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு, நகரும் ஆலோசனை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை 46,794 குழந்தைகள்
பயனடைந்துள்ளனர்.
மாணவர்களது ஒருமுகத் தன்மையை மேம்படுத்துதல், பகுப்பாய்வுத் திறன்
மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான
போட்டிகளில் 11 லட்சத்து, 25 ஆயிரத்து 628 மாணவ மாணவியர்
பங்குபெற்றுள்ளனர்.
ஆங்கில வழிக் கல்விஏன்?
தங்களுடையகுழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம்
பெற்றோர்களிடையே இருப்பதால், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் ஆங்கில
வழி கல்வியினை போதிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க
வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது.
ஏழை, எளிய பெற்றோர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும்; ஆங்கில
மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய ஆற்றலும் உள்ள
குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தர
வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு சில பள்ளிகளில் ஆங்கில வழிப்
பிரிவு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 6,594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6
ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன. இது தவிர
ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
திமுகவுக்குகேள்வி
இந்த அரசின் நடவடிக்கை மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர்
இதை குறை கூறி வருகின்றனர். ஆனால், அவ்வாறு குறை கூறுவோர் தங்கள்
பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? தி.மு.க.வின்
சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி
வழிக் கல்வியில் படிக்க வைத்தாரா? இல்லையே! அவர்களுடைய குடும்ப
உறுப்பினர்கள் வைத்திருக்கும் பள்ளிகளிலாவதுதமிழ் மொழி வழிக் கல்வி
பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால் அதுவும்இல்லை.
பள்ளிகளின் பெயர்கள் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. 'துர்காவதி
கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பு, சென்னை-29, மேத்தா நகர், ராஜேஸ்வரி
தெருவில் சன்ஷைன் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என்ற
பள்ளியைஇயக்கி வருகிறது.இந்தப் பள்ளியின் இயக்குநர் மு.க.ஸ்டாலினின் மகள்
செந்தாமரை சபரீசன். மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதியும் இந்த
அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கிறார். இங்கு என்ன தமிழ்வழிக்
கல்விபோதிக்கப்படுகிறதா?
இதேபோன்று, சென்னை, வேளச்சேரி, டாக்டர் சீதாபதி நகர், ராணி தெருவில்,
சன்ஷைன் மாண்டிசோரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும்,
மடிப்பாக்கத்தில் சன்சைன் சென்னை சீனியர் செகன்ட்ரி ஸ்கூல் இயங்கி
வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் இயக்குநராக இருப்பவர்,
மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். இங்கு ஆங்கில வழிக் கல்வி
மாத்திரம் இல்லை. இந்தியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மழலையர்
வகுப்பிற்கான ஆண்டுக் கட்டணம் 9,000 ரூபாய். 11 மற்றும் 12 ஆம்
வகுப்புகளுக்கான கட்டணம் 15,400 ரூபாய்.
தனியார் பள்ளிகள் எல்லாம் இதேபோன்று ஆங்கில மொழி வழியில் வகுப்புகளை
நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவேதான், கட்டணம் ஏதும் செலுத்தாமல்
ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான், 6,594 அரசு
பள்ளிகளில், ஒரு பிரிவில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது"
என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Sunday, February 2, 2014

விழுப்புரத்தின் போராட்ட நிகழ்வுகள்

போராட்ட நிகழ்வுகள்

விழுப்புரம் மாவட்ட பேரணியில் ஆசிரியர்கள் ஆர்பரிக்கும் காட்சி

விழுப்புரம் மாவட் பேரணியில் ஆசிரியர்கள் ஆர்பரிக்கும் காட்சி

விழுப்புரம் மாவட்ட பேரணியில் ஆசிரியர்கள் ஆர்பரிக்கும் காட்சி

விழுப்புரம் மாவட்ட பேரணியில் ஆசிரியர்கள் ஆர்பரிக்கும் காட்சி

விழுப்புரம் மாவட்ட பேரணியில் ஆசிரியர்கள் ஆர்பரிக்கும் காட்சி

Saturday, February 1, 2014

எங்கள் ஒன்றிய ஆசிரியர்கள் 105 பேர் வெற்றியை நோக்கி விழுப்புரம் நோக்கி தர்ணாவிற்கு சென்றுகொண்டிருக்கின்றோம்

ரூபாய் நோட்டு மாற்றம்: தங்கம் விலை உயர்கிறது- கருப்புப் பணத்தை தங்கமாக்கும் பதுக்கல்காரர்கள

ரூபாய் நோட்டு மாற்றம்: தங்கம் விலை உயர்கிறது- கருப்புப் பணத்தை
தங்கமாக்கும் பதுக்கல்காரர்கள்
2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை
மாற்றி புதிய நோட்டுகள் வழங்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தால், தங்கம்
விலை கணிசமாக உயரக்கூடும் என வர்த்தகத் துறையில் இருப்பவர்கள்
தெரிவிக்கின்றனர்.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, ரூபாய் நோட்டுகளை மாற்றும்
திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கையால்
கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தலாமே தவிர, கருப்புப் பணத்தை வெளிக்
கொண்டுவர முடியாது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியின் திட்டப்படி, 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய்
நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் பிறகுதான் புதிய ரூபாய்
நோட்டுகளை பெறமுடியும். இப்படி வங்கிக் கணக்கில் பணம்
செலுத்தப்படும்போது, அது வருமானவரித் துறையின் கண்காணிப்பில்வந்துவிடும்.
இப்படித்தான் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரலாம் என கணக்குப்
போடுகிறது ரிசர்வ் வங்கி. ஆனால், கில்லாடி கருப்புப் பண முதலைகள் வேறு
மாதிரியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுகுறித்து 'தி இந்து-விடம்
பேசிய வணிகம் சார்ந்த வல்லுநர்கள், ''ரிசர்வ் வங்கி அறிவிப்பு வந்ததுமே
கருப்புப் பணம்வைத்திருப்பவர்கள்அசுரகதியில் இயங்க ஆரம்பித்துவிட்டனர்.
வங்கிகளில் நேரடியாக பணத்தைக் கொண்டுபோய் மாற்றினால் சிக்கல் என்பதால்,
கள்ள மார்க்கெட்டில் தங்கத்தை வாங்கிப் பதுக்க ஆரம்பித்துவிட்டனர்.
முன்பெல்லாம் கறுப்புப்பணத்தைரியல் எஸ்டேட்டில் இறக்குவார்கள்.
இப்போது அந்தத் தொழிலில் விதிகள் கடுமையாக்கப்பட்டுவிட்டதால் தங்கத்தில்
முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தங்கம்
இறக்குமதியில் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய நிதியமைச்சகம்.
இதையடுத்துஇந்தியாவுக்குள் வரும் கடத்தல்தங்கத்தின்அளவு அதிகரிக்கத்
தொடங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு மாற்றும்
நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் தங்கமாக மாறி மறுபடியும்
பெட்டிக்குள் உறங்கப் போகிறது. அதேசமயம், கருப்புப் பணத்தை
வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்கத்தைபோட்டி போட்டுக்கொண்டு வாங்கிப்
பதுக்க ஆரம்பிப்பதால் இயல்பாகவே தங்கத்தின் விலை எகிறிவிடும். இதன் மூலம்
இந்தியாவுக்குள் வரும் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரிக்கும்'' என்று
வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.