Friday, June 26, 2015

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிக

    தினமும் காலையில் தூக்கத்தில் இருந்துஎழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர்அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகிவருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும்விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால்தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக்குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞானமுறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

    இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறுஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றிவந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப்பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள்எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்)குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறுதொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால்அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.ஆனால் தற்பொழுது நாகரீக உலகில்அவையெல்லாம் அநாகரிகமாககணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea)அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்றுநாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம்உடலினுள் புகும் நோய் கிருமிகளைஅழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்புசுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரைவிட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும்போது உடலினுள் சென்று பல நோய்களைகுணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும்அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில்நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச்செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாகவைத்திருத்தல் அவசியமாகின்றது.

Must Visit & Like our page : fb.com/OurErode

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழையகடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீனகால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம்மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்தமுடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம்நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள்,ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்டநோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸிஎனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமானஉடல் பருமன், ஆஸ்துமா, காச நோய்,மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர்வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரைவியாதி, சகலவிதமான கண் நோய்கள்,கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமானமாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத்,தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்குஇந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றதுஎன இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் ,பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர்(கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம்எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையானஉங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும்,மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ளவேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்தமுடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம்கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும்நோயாளிகள் தமது பிணி நீங்கிசுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமானவாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்குஎத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்றவேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள்முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லதுமேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலுஉண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள்கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்துதினமும் இம் முறையினைப் பின்பற்றவேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாதமருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாகஉட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டி வரும். ஆனாலும் இந்த முறையைநமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப்பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றேசொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும்சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றிஅமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகைசொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாகஅமையலாம்.

No comments:

Post a Comment