Saturday, July 11, 2015

உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சிலவசதிகள்!

உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சிலவசதிகள்!
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன்வரும் மொபைல் போன்களையே என்பதுஇன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சிலகுறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள்இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா?
என்ற கேள்வி உங்கள் மனதில்எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்திவருகிறோம். சில வசதிகள்அடிக்கடி பயன்படுத்தவேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சிலமுக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள்
மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும்நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்குமுதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்துசெல்லவும். தொடர்ந்து வலதுபுறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்குநமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disableஎன்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன்கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர்வழிஇணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும்.Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலதுமேலாகச் செல்லவும். சற்றுப்பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும்செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு“Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்குஇந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர்,நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும்ஹோம் ஸ்கிரீன்.இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும்நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப்பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்குஎளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்குஅடுத்தபடியாக, EverythingMe மற்றும்Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத்தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன்செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச்இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி,தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதிநமக்குஇதில்உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும்கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்கவேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்தஉங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதிஅமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள்போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்றுஉணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இதுஎவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சிலவேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும்முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளிகட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன்ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ளவசதி என்றாலும், மேலும் இதில்சிலநகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்குதருகிறது. திரையின் ஒளிவிடும்தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும்தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம்ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின்சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளிவெளிப்பாடுதான், பேட்டரியின் அதிகசக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத்தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல்கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல்கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில்SwiftKey என்பதுசிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில்முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்தஅப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம்,விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன்என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக்காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்துநாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதிசெய்த நிகழ்வுகள்(,upcoming appointments), பேட்டரியின் மின்திறன்அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன்மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும்.இந்த வகையில் அதிககூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கிவைக்கவும். அதன் பின்னர்,உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம்இயங்கும்போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்குசிலநன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும்.ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்தஆண்ட்ராய்ட் சிஸ்டம்சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதிஅளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம்செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில்“Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி,அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின்அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில்உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவு
ம். அதில்நீங்கள் உருவாக்கிய லேபிள் மீதுடேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்குமாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்படவேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில்உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள்,மிகச்சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில்காட்டப்படும். ஆனால், சிலஇணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழிஒன்றுஉள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில்Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு“Force enable zoom” என்பதில்உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப்பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.
மேலே தரப்பட்டுள்ளகுறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்பதுஅவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும்உண்மை.

ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு

தமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களு
க்குசிறந்தமுறையில் கல்விபுகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு
ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் புனியா பாராட்டு தெரிவித்துள்ளார். தேசி்ய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டுநாள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.
ஆதிதிராவிட சமூதாயத்தை சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர். சென்னை தலைமைசெயலகத்தில் மாநில அளவிலான ஆலோசனையையும் அவர்கள் நடத்தினர்.இதன் பின்னர்ஆணையத்தலைவர் புனியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலன்கள் குறித்த விவாதிப்பதற்காக வந்திருக்கிறோம். ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் சுப்ரமணியம்,தலைமை செயலாளர் ஞானதேசிகன், காவல்துறை டிஜிபி அசோக்குமார் உள்ளிட்டஅதிகாரிகளை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் கல்வி,சுகாதாரம் உள்ளிட்டபல்வேறு துறைகளில் ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். ஆதிதிராவிடர் சமூதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்விவழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தேசிய சராசரியை விட7 விழுக்காடு கூடுதலாக தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விவழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கான சிறப்பு ஆசிரியர் தேர்வு முகாமையே நடத்துவதாக தமிழக அரசுஉறுதியளித்துள்ள
து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எப்படி இருக்க வேண்டும் கல்வி...

வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்கமுடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி,வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது. செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்!
சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி,ஒழுக்க வலிமையைத் தராத கல்வி,பிறர் நலம் நாடுகின்ர உணர்வைத் தராத கல்வி, சிங்கம்போன்ர தைரியத்தைக் கொடுக்காத கல்வி,அதைக் கல்வி என்றுசொல்ல முடியுமா?
சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச்செய்கின்ற கல்வியே தேவை.
- சுவாமி விவேகானந்தர்

டாஸ்மாக்

இன்றையை கண்ணேட்டம்
(டாஸ்மாக்)
தமிழ்நாட்டுல,
4042நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அதுதமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
இன்றுஉன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
மதுநாட்டுக்கு வீட்டுக்குகேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்றுமக்களின்மீதுஅன்பை பொழியும் அரசுஅவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம்தட்டி கேட்காது.
குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும்கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம்தட்டி கேட்காது.
ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவதுபோல் நீதிமன்றம்இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.
மக்கள் மீதுஅககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

Sunday, July 5, 2015

சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

   அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர். 

 

            அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றலை தடுக்கும் நோக்கில், முதல்வர் ஜெ., 2011ல் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கினார். அதன்படி, மாநில அளவில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் ௧ வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா 1,500 ரூபாய், பிளஸ் 2 வகுப்பிற்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கி வருகின்றனர்.

இதற்காக, அந்தந்த பள்ளிகளில் 10 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன், அவர்களது வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை சேகரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் வழங்குவர். அங்கிருந்து, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியார் 'பைனான்ஸ்' நிறுவனத்திற்கு மாணவர்கள் பெயர் பட்டியல், வங்கி கணக்கு எண் அனுப்பப்படும். ஆண்டு தோறும் அரசு நேரடியாக தனியார் 'பைனான்ஸ்' கம்பெனிக்கு சிறப்பு ஊக்க தொகையை ஒதுக்கும். அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் அந்தந்த மாணவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கே செலுத்திவிடும்.

இந்நிலையில், கடந்த 2010 முதல் 13ம் ஆண்டு வரை ௧௦ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த பெரும்பாலான மாணவர்களுக்கு, அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து மாணவர்கள் பள்ளிகளில் சென்று கேட்டால், சி.இ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களாக மாணவர்கள் புகார் தெரிவித்தும் சிறப்பு ஊக்கத் தொகை வரவில்லை.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து மாணவர் பெயர், வங்கி சேமிப்பு கணக்கு எண்களை பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பிவிடுவோம். தனியார் 'பைனான்ஸ்' நிறுவனம் அரசிடம் நிதியை பெற்று மாணவர்கள் வங்கி கணக்குக்கு செலுத்துவர். வங்கியில் 'ஜீரோ பேலன்ஸ்' வங்கி கணக்கு துவக்க கூறுகின்றனர்.

ஆனால், மாணவர்கள் அதில் குறைந்தது 500 ரூபாயாவது வைத்து கணக்கை நடப்பில் வைத்திருந்தால் மட்டுமே, வங்கி கணக்கு செல்லுபடியாகும். இல்லாவிட்டால் வங்கி கணக்கை ரத்து செய்து விடுகின்றனர். இது போன்ற நிலை மாநில அளவில் நிலவுவதால் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வரவில்லை. அரசு தான் முடிவு எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

போலி மருந்து பற்றி புகார் செய்வது எப்படி? மருந்து கடைகளில்'ஸ்டிக்கர்' ஒட்ட முடிவு

  :''போலி மருந்துகள் குறித்து, புகார் செய்வது எப்படி என்பது பற்றி, அனைத்து மருந்து கடைகளிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்,'' என, மத்திய மருந்து உற்பத்திதுறை செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சென்னையில் துவங்கிய இரண்டு நாள், 

 

               இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்க வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: இந்தியாவில் உற்பத்தியாகும், 2 லட்சம் கோடி ரூபாய் மருந்துகளில், 50 சதவீதம், 200 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன; குறைந்த விலை தயாரிப்பே இதற்குக் காரணம். குறைவான நேரத்தில், அதிக மருந்து தயாரிக்கிறோம்; ஆனால், உரியதரத்தில் இல்லை.மருத்துவ உபகரணங்கள் தவிர, மருந்து மூலக்கூறுகளைப் பெருமளவு இறக்குமதி செய்கிறோம்; உள்நாட்டில் கிடைத்தால், குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும்.
ஓராண்டில், பல உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்துள்ளது. காசநோய், பால்வினை நோய் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. உணவு உற்பத்தி, மருந்து உற்பத்தியில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதால், போலி மருந்துகள், 0.003 சதவீதமே உள்ளன.போலி மருந்துகள் குறித்து, தேசிய மருந்து ஆணைய இணையத்தில், 'பார்மா ஜன் சமாதான்' என்ற பகுதியில் புகார் செய்யலாம். எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து, நாடு முழுவதும் உள்ள, ஏழு லட்சம் மருந்து கடைகளிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.