Saturday, December 17, 2016

கருப்புப் பணம்


கறுப்புப் பண களஞ்சியமாக, தமிழகம் விளங் குவதை உணர்த்தும் விதமாக, தமிழகத்தில், எட்டு மாதங்களில், 2,262 கோடி ரூபாய் அள விற்கு, பதுக்கல் சொத்துக்கள் கணக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த ஆண்டில், கறுப்புப் பண பதுக்கலில், நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ரூ.63 ஆயிரம் கோடி : கறுப்புப் பண பதுக்கலை வெளியே கொண்டு வருவதற்காக,மத்திய அரசு, பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரி விக்கும் திட்டம், செயலுக்கு வந்தது. அதன் மூலமாக, நாடு முழுவதும், 63 ஆயிரம் கோடி ரூபாய், கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் வெளியே வந்தது. அதில், தமிழகத்தில், கணக்கில் காட்டப்படாத, 2,700 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கணக்கில் வந்தது. இந்நிலையில், நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது; அதைத் தொடர்ந்து நடந்த சோதனைகளிலும், தமிழ கத்தில் நிறைய சிக்கின. இதில், கட்டுக்கட்டாக, 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் சிக்கியது தான், வருமான வரித்துறையை அதிர்ச்சி அடையச் செய்தது. இதையடுத்து, வர்த்தக வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர்.இதற்கிடையில், இந்த நிதியாண் டில், வருமான வரி சோத னைகள் மூலமாக, கணக்கில் கொண்டு வரப் பட்ட கறுப்புப் பணத்தில், நாட்டிலேயே முதலிடத்தை, தமிழகம் பிடித்துள்ள தகவல்தெரியவந்துள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரம் கூறியதாவது: நாட்டில், 18 வருமான வரி இயக்கு னரகங்கள் உள்ளன. அதில், தமிழகம் - புதுச்சேரி இயக்குனரகத்தில் தான், கறுப்புப் பணம் மற்றும் தங்க நகைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி தொடர்பான சோதனையில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 177 கிலோ தங்கம் சிக்கியது. கறுப்பு பணம் : வருமான வரித்துறை வரலாற்றில், ஒரு தனி நபரிடம் நடத்திய சோதனையில், இவ்வளவு பெரிய தொகை, இதுவரை சிக்கியதில்லை. அது மட்டு மின்றி, இந்த நிதியாண்டில், நாடு முழுவதும் நடந் துள்ள வருமான வரி சோதனையில், தமிழகம் - புதுவை பிராந்தியத்தில் தான் கறுப்புப் பணம், அதிக அளவில் கணக்கில் வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,2016 ஏப்ரல், 1 முதல், 68 சோதனை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில், 307 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 84 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனைகளில் சிக்கிய ஆவணங்கள் வாயி லாக, சொத்துக்களும் கணக்கில் கொண்டு வரப் பட்டன. அந்த வகையில், எட்டு மாதங்களில், இதுவரை, 2,262 கோடி ரூபாய்க்கும் அதிக மான கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவில் உள்ள, 18 இயக் குனரகங்களில், வேறு எங்கும் இந்த அள விற்கு கறுப்புப் பணம், கணக்குக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த, 2,262 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு, இனி, அவர்கள் வரி செலுத் தியாக வேண்டும்.இவ்வாறு வருமான வரி வட்டாரம் கூறியது. முதல் மூன்று இடமும் நமக்கே! : இந்த ஆண்டில் இதுவரை நடந்த பறிமுதல் களில், சேகர் ரெட்டிக்கு தான் முதலிடம். தமிழகம் - புதுச்சேரியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் சிக்கிய, 83 கோடி ரூபாய் தான், இரண்டாம் இடத்தில் உள்ளது. முன் னாள் தி.மு.க., அமைச்சர், ஜெகத்ரட்சகன் வீட் டில் நடந்த சோதனையில், 27 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 23 கோடி ரூபாய் தங்கம் பறிமுல் செய்யப்பட்டது, மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment